Tuesday, December 14, 2010

" ஒன்னுகொன்னு துணையிருக்கும் உலகத்திலே...."

என் கருத்து:
கண்ணியமான உழவனொருவன்,
மனிதனின் சுவாசமும் தீண்டாத மண்ணில் உணர்வுகளை திரட்டி விதையாயிட்டு 
வஞ்சகத்தை அடித்து புதைத்து உரமாயிட்டு,
தூய நீரூற்றி, அன்பெனும் ஒளியை உணவிட்டு,
ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவமாய் காத்திருந்து,
ஒரேயொரு கனி பழுத்து அதை பறித்து,
பழச்சாறுண்டு, உண்ட மயக்கத்தில் 
எழுதிய வரிகள் தானோ அவை!
" ஒன்னுகொன்னு  துணையிருக்கும் உலகத்திலே...."
படம்-நந்தலாலா
கேட்டுப்பாருங்கள்.