Thursday, November 17, 2011

இரவு முழுதும் நடக்கும் கலவி

இவள் அவன் இனியவள்
இவன் காதல் பகிர்ந்தவள்;
அவன் நககீற்று கடிப்பவள்
அழகு மொழிபேசி கவிழ்பவள்;

இவள் அவன் இனியவன்
இரவில் கொஞ்சம் கொடியவன்;
அந்திசாய்ந்ததும் வந்து மோதியவன்
வந்து மோதியதும் வசனம் மறந்தவன்;


இரவும் நிலவும் கிடக்கும் தழுவி
இரவு முழுதும் நடக்கும் கலவி;
காற்று கூட புகவில்லை
ஆனாலும் அணைப்பு போதவில்லை;

இந்த பாவை கொண்ட மோகம்
இரவு கடந்து பகலில் நீளும்;
இந்த பாவை கண்ட தாகம்
கடலையும் முடித்து காற்றை குடிக்கும்;

காலம் நேரம் மறந்துபோச்சு!
ஆடைகள் எங்கோ தொலஞஂசு போச்சு!
கவிதைகள் நான்கு பிறந்தாச்சு!
ஏதோ கொஞ்சம் காமம் கடந்தாச்சு!

No comments:

Post a Comment