Thursday, November 17, 2011

செய்த கர்மமே விதியென அறிந்தும்

உண்மையில் பிறப்பது ஞானியாகத்தான் !!
உயர்வும் தாழ்வும் வளரும் போதுதான்!!
வளரும் போதே ஞானி தேய்கிறான்.
அது தெரியாமல் எதையோ தேடுகிறான்!


பயம் இல்லை பணம் இல்லை
வஞஂசகம் இல்லை வாய்பேச்சுஇல்லை
போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை
உண்மையில் ஞானி பிறக்கும் பிள்ளை!

செய்த கர்மமே விதியென அறிந்தும்
பலனை தவிர்க்க பரிகாரம் தேடுகிறான்!
மனதின் மாயையில் உலகம் விரிந்தும
்மனதை ஏனோ மதிப்பிட மறுக்கிறான்!


இவனென்ன ஏதோ அறிவாளி போலவும்
நாமெல்லாம் ஏதோ அறியாதவர் போலவும
்இப்படி என்னை நீ பேசுவது புரியும்.
நானுமொரு தேய்ந்த ஞானிதான்!

1 comment: