Friday, January 11, 2013

கன்னியாகுமரியில் காலை கதிரவனுடன் ....




என்றும் உதிக்கும் ஆதவன்  தான் 
இன்றும் உதிப்பது அவன் தான் 
குமரிகரையில் இந்த குதூகலம் ஏன் ?
கவனமாய் கைகட்டி காத்திருந்தேன் ....

ஆதவன் வர ஆரவாரம் கூட 
காத்திருந்த கருமேகம் பொன்னிறம் சூட 
உயர்ந்த வள்ளுவன் அதை எடுத்துடுத்திக்கொள்ள 
விடியல் அழகுகண்டு வியந்து நின்றேன் .....



        2012 டிசம்பர் 30 காலை அற்புதமான கன்னியாகுமரி கடற்கரையில்  
ஆதவ உதய  தரிசனம்.  சபரிமலை பயணத்தை கன்னியாகுமரி விடியலுடன் ஆரம்பித்தோம்.
        
         என் நலம் விரும்பியும் சித்தப்பாவுமான திரு.மணிகண்டன் அவர்களுடன் அந்த காலை ஒரு இனிய காலை. 

கன்னியாகுமரியில் காலை கதிரவனுடன் ....





Tuesday, September 11, 2012

ஒன்றாய் ஒருமைபட....



யாரோ நீ!
கண்களால் மோதுகிறாய்...
உன்னிரண்டு காந்தமா,?
என்னிரண்டு காந்தமா?

மோதும் போதெல்லாம்
உடைவது நானானேன்
உடைவது நானென்றால்
உண்ணிரண்டு காந்தம்தான்...

கண்ணொடு கவர்ந்திழு
காலம் போகும்முன்
அலைபாயும் என்மனம்
ஒன்றாய் ஒருமைபட....

Monday, September 3, 2012

சித்தர்கள் ராஜ்யம் (தோழியின்)

       சித்தர்கள் . ஏதோ சாமியார்கள், ஆன்மீகவாதிகள், மருத்துவ நூல்கள் எழுதியவர்கள் போன்ற சிற்சில தகவல்களையும் தாண்டி பிரமிக்க வைக்கும் தகவல் களஞ்சியம் தான் ''சித்தர்கள் ராஜ்யம்'' என்ற இணையதளம். 

       மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேர்த்திருக்கிறார் அந்த இணையதளத்தை நடத்தும் 'தோழி'. 
வசியம், காயகற்பம், சித்தர்களை இன்றய விஞ்ஞானிகளுக்கும் முன்னோடிகளாக அறிமுகப்படுதுவது மேலும் கூடுவிட்டு கூடு பாய்வது, மந்திரகளின் உண்மையான செயல்பாடு விளக்கம் போன்ற தகவல்கள் மெய்சிலிர்க்கவைக்கக்கூடியவை. 


பதிவுகளின்
பிரமிப்பை நீங்களும் உணர


[url]www.siththarkal.blogspot.com [/url]


Friday, June 29, 2012

மனிதா நீ சந்தர்ப்பவாதியாய்.....




காணும் உடலிலும்
பேசும் மொழியிலும்
அமுதொழுக பேசும்போது
மனிதனாய் நீ ஒருவன்தான்.....

சந்தர்ப்பவாதியாய்
காரியசித்தனாய்
குணம்மாற்றி பேசும்போது
கடவுளாய் நீ அவதாரபுருசனோ!

ஆடை பூட்டி, அணி பூட்டி
மகனை மணமகனாய்
மணமேடை ஏற்றும்போது
மனிதா நீ தகப்பன்தான்...

வசதி தரம் பார்த்து
வரதட்சணை வரை பார்த்து
விற்பனைவிலை குறிக்கும்போது
மனிதா நீ மாட்டுவியாபாரியோ!

காதல் மொழி பேசி
கவிதையாய் சிரித்துபேசி
கயிறு கட்டும்வரை
கன்னிக்கு நீ காதலன்தான்...

கவிதைகள் கட்டுகதை ஆகும்போதும்
கட்டிய கயிறு பிடித்து
கழுத்தை நெறிக்கும்போதும்
காதலா! இதுதான் காதலா?...

தலை தரை பார்த்து
தடுமாறி விழபார்த்து
அசைந்து போகும்போது
அவள் அழகுதான்....

பேச இடம் கொடுத்து
பின் பேசி பழகி
பித்தர்கள் ஆக்கும்போது
அட... அவள் தானா இவள்!?....

வார்த்தை வார்த்தையாய் வரி சேர்த்து
வரி வரியாய் கவிதை கோர்த்து
வக்கனையாய் பேசும்போது
நான் நல்ல மனிதன்தான்...

மனம் மயங்கும்போது
மனிதம் மறக்கும்போது
நானும் ஒருநாள்
சந்தர்ப்பவாதிதான்!













Tuesday, January 31, 2012

வேரை மறந்த விழுதுகள்



பெற்ற மகன்கள் அழகு பார்த்து
பெண்ணவள் தன்னவன் முகம்கூட  மறந்தாள்;
பாவம் பதுமை முதுமையும் உடுத்தினாள்,
சிக்கன சேலையில் சிதைந்தும் கிடக்கிறாள்;

முதிர்ந்த உணர்வுகள்   உடலை நடுக்கியும்,
மூக்குக்கண்ணாடி கீறல்கள்  தடுத்தும்,
மூத்தமகன் அப்பா என்றழைக்க
மூன்று மாதமாக தகப்பன் தவிக்கிறான்;

அவனும் அவளும் எழுதிய கவிதைகள்,
அன்பெனும் ஆன்மிகம் அறிந்தே பிறந்தன;
காலங்கள் ஓடிட ஆன்மிகம் மறந்தன;
காதலின் கவிதைகள் இலக்கணம் பிழைத்தன;

இப்படி பிள்ளைகள் பிறக்கும் என
அன்னையும் பிதாவும் முன்னறியவில்லையே!
ஆண்டவன் அருள்வேண்டி ஆலயம் தொழுதும் ,
இரக்கமற்ற ஆண்டவன் அருள் தரவில்லையே!

நெஞ்சூட்டி வளர்த்த தாய்,
செஞ்சூட்டில் கருகும் முன்
வந்தொருமுறை  வசையாவது பாடுங்கள் ,
வேரை மறந்த விழுதுகளே!






Friday, December 9, 2011

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

    தோல்வி  என்பது  மீண்டும்  ஒருமுறை  என்  உண்மையான  விருப்பம் என்ன என்பதை நான் பரிசீலிக்கும் வாய்ப்பாக தான்  இருக்க வேண்டும்.
    எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில்  நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் .  அல்லது பலனை அடைவதற்கு முன்னே  கஷ்டபடுவது போல் எதையோ செய்து  அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம்   அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....
     இந்த  'அல்லது வரிசை'யை மேலும்  நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.
      இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால்   எப்படி இருக்கும்?! கற்பனை செய்து  பார்த்தால் .... ஐயோ!  ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில்  ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''.  நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....


    அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது  போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....

வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .

 யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....
நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.
அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.
 அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில்  தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன்.  இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......

Thursday, November 17, 2011

செய்த கர்மமே விதியென அறிந்தும்

உண்மையில் பிறப்பது ஞானியாகத்தான் !!
உயர்வும் தாழ்வும் வளரும் போதுதான்!!
வளரும் போதே ஞானி தேய்கிறான்.
அது தெரியாமல் எதையோ தேடுகிறான்!


பயம் இல்லை பணம் இல்லை
வஞஂசகம் இல்லை வாய்பேச்சுஇல்லை
போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை
உண்மையில் ஞானி பிறக்கும் பிள்ளை!

செய்த கர்மமே விதியென அறிந்தும்
பலனை தவிர்க்க பரிகாரம் தேடுகிறான்!
மனதின் மாயையில் உலகம் விரிந்தும
்மனதை ஏனோ மதிப்பிட மறுக்கிறான்!


இவனென்ன ஏதோ அறிவாளி போலவும்
நாமெல்லாம் ஏதோ அறியாதவர் போலவும
்இப்படி என்னை நீ பேசுவது புரியும்.
நானுமொரு தேய்ந்த ஞானிதான்!